வெலிக்கடையில் கொலைக்கு சயனைட்? - www.pathivu24.com

பிந்திய பதிவேற்றம்

Home Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Friday, April 12, 2019

வெலிக்கடையில் கொலைக்கு சயனைட்?


வெலிக்கடை சிறைச்சாலையில் சக கைதிகளை கொலை செய்ய  சயனைட்களை மறைத்து வைத்திருந்த கைதியொருவர் அகப்பட்டுள்ளார்.

சிறையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள கைதியொருவரிடமிருந்து, சயனைட் குப்பிகள் இரண்டும் மருந்து ஏற்றப்பட்ட ஊசிகள் இரண்டும், புலனாய்வுத் துறை அதிகாரிகளலால் கைப்பற்றப்பட்டுள்ளன என, இலங்கை காவல்துறை தலைமையகம் அறிவித்துள்ளது.

சிறைச்சாலை தேடுதலில், சயனைட் அடங்கிய சயனைட் குப்பிகள் இரண்டு, மருந்து ஏற்றப்பட்ட ஊசிகள் இரண்டும் கைப்பற்றப்பட்டன. அதனை வைத்திருந்தார் என்ற சந்தேகத்தில், கைதியொருவரும் கைதுசெய்யப்பட்டுள்ளார் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிறைச்சாலைக்குள் இருந்து செயற்படும் குழுவின் உறுப்பினர்களில் இருவரை படுகொலை செய்யும் நோக்கிலேயே, இந்த பொருள்கள் தருவிக்கப்பட்டதாக, விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.



சயனைட் அடங்கிய குப்பிகள் இரண்டும் மருந்து ஏற்றப்பட்ட ஊசிகள் இரண்டும், மேலதிக விசாரணைகளுக்காக, அரச இரசாயன பகுப்பாய்வுத் திணைக்களத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here

Pages